search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெம்போ மோதல்"

    கோவையில் இன்று அதிகாலை டெம்போ மோதி சமையல் மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவை:

    நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 60). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை 5 மணியளவில் ரங்கராஜ் அந்த பகுதியில் உள்ள கடைக்கு டீ குடிப்பதற்காக சென்றார். பின்னர் ஓட்டலுக்கு செல்வதற்காக கோவை- சத்தி ரோட்டை கடக்க முன்றார்.

    அப்போது அந்த வழியாக கோழிகளை ஏற்றி வந்த டெம்போ ரங்கராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ரங்கராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்தக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ரங்கராஜின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×